close
Choose your channels

மோகன் வைத்யா சேஃப்: அப்போ வெளியேறுவது யார்?

Sunday, July 14, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் வீட்டில் இருந்து ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேறிக் கொண்டு இருப்பது தெரிந்ததே. அந்த வகையில் இந்த வாரம் வெளியேறும் பட்டியலில் வனிதா, மதுமிதா சரவணன், மோகன் வைத்யா மற்றும் மீராமிதுன் ஆகிய ஐந்து பேர் உள்ளனர் இவர்களில் மோகன் வைத்யா அல்லது சரவணன் வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கருதப்பட்டது.

இந்த நிலையில் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறும் நபரை சாண்டி அறிவிப்பார் என கமல்ஹாசன் கூறினார். இதனை அடுத்து சாண்டி பிக்பாஸ் கவரை எடுத்துக் கொண்டு வந்து அதில் மோகன் வைத்யா பெயர் இருப்பதை அறிவித்தார். இதனை அடுத்து மோகன் வைத்யா கண்ணீருடன் மற்ற போட்டியாளர்களிடம் விடைபெற்று கிளம்ப தயாரானார்.

இந்த நிலையில்தான் திடீர் திருப்பமாக சாண்டி அறிவித்த பெயர் வீட்டிலிருந்து வெளியேறும் நபரின் பெயர் அல்ல என்றும் வீட்டில் சேஃப் ஆக இருக்கும் நபரின் பெயர் என்றும் கமல்ஹாசன் ஒரு டுவிஸ்ட் வைத்தார். இதனையடுத்து இன்ப அதிர்ச்சியான மோகன் வைத்யா மகிழ்ச்சியில் எல்லோருக்கும் நன்றி தெரிவித்தார்.

எனவே 5 பேர்களில் மோகன் வைத்யா இந்த வாரம் சேஃப் என்பதால் மீதமுள்ள வனிதா, மீராமிதுன், சரவணன் மற்றும் மதுமிதா ஆகிய நான்கு பேர்களில் வெளியேறும் நபர் யார் என்பதை இன்று கமல்ஹாசன் அறிவிக்க உள்ளார்.

அனேகமாக சரவணன் வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது ஏனெனில் வனிதா, மீராமிதுன், மதுமிதா ஆகிய மூவரில் ஒருவர் வெளியேறி விட்டால் வீட்டில் உள்ள பரபரப்பும், சண்டையும் குறைந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.