close
Choose your channels

வனிதாவை தரமான சம்பவம் செய்த கமல்ஹாசன்

Saturday, July 13, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் ஓங்கி ஒலிக்கும் ஒரே குரல் என்றால் அது வனிதாவின் குரலாகத்தான் உள்ளது. அவர் பேசுவதை மட்டுமே மற்றவர்கள் கேட்க வேண்டும், அவர் வைத்ததுதான் பிக்பாஸ் வீட்டின் சட்டம் என்பதுபோல் பேசி வருகிறார். பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த முதல் நாள் முதல் இன்று வரை வனிதாவின் ஆட்டம் கொஞ்சம் அதிகமாகவே உள்ளது. இப்போதுதான் வனிதாவை ஒருசிலர் துணிச்சலாக எதிர்த்து பேசி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று கமல் முன்னிலையில் வனிதா, அபிராமியை குறை கூறுகிறார். ஒரு கேப்டனுக்குரிய வேலையை பார்க்க விடாமல், அபிராமியை தினமும் டார்ச்சர் செய்த வனிதா, அபிராமி மீதே குறை கூறியதை கமல் ரசிக்கவில்லை. அவர் வனிதாவிடம், 'வேறொருவர் கவனத்துக்கு வந்துவிடக்கூடாது என்பது உங்கள் பேச்சில் இருந்து வெளிப்படுகிறது. ஒரு குரல் மட்டுமே ஓங்கி ஒலிக்கக்கூடாது. நாம் எந்த அளவுக்கு பேசுகிறோமோ, அதே அளவுக்கு காது கொடுத்து கேட்கவும் வேண்டும்' என்று கமல் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் நறுக்காக கூறுகிறார்.

கமல் தன்னை கடுமையாக தாக்குகிறார் என்பது வனிதாவுக்கு புரியாமல் இருக்காது. ஆனால் அவர் திருந்துவார், கமலின் அறிவுரையை கேட்டு இனிமேல் மற்றவர்கள் பேச்சை அவர் காது கொடுத்து கேட்பார் என்றெல்லாம் நாம் எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் வனிதாவின் டிசைன் அப்படி, அல்லது பிக்பாஸின் திரைக்கதை அப்படி. இருப்பினும் கமல் செய்ய வேண்டிய கடமையை இன்று சரியாக செய்துள்ளார் என்பதில் ஒரு திருப்தி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.