close
Choose your channels

தடுக்கி விழுந்த கவின், மயங்கி விழுந்த சேரன்: பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு

Wednesday, August 7, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் ஐந்து குழுக்களாக பிரிந்து ஒரு டாஸ்க் கொடுக்கப்படுகிறது. அதில் மதுமிதா-அபிராமி, சாக்சி-லாஸ்லியா, கவின் - சேரன், சாண்டி-தர்ஷன், முகின் - ஷெரின் என ஐந்து ஜோடிகள் பிரிக்கப்பட்டு அவர்களுக்கு ஒரு டாஸ்க் வழங்கப்படுகிறது

இந்த டாஸ்க்கை அனைவரும் விறுவிறுப்பாகவும் சுறுசுறுப்பாகவும் விளையாடி வரும் நிலையியில் கவின் திடீரென தடுக்கி விழுகிறார். சேரன் ஓடிய களைப்பில் மயங்கி விழுகிறார். இருவருக்கும் காயம் ஏற்பட்டதா? என்று தெரியவில்லை என்றாலும் பிக்பாஸ் வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்கள் பதட்டம் அடைகின்றனர்.

நேற்று சேரன் திடீரென வெளியேற்றப்பட்டதால் போட்டியாளர்கள் அனைவரும் பெரும் கவலையுடன் இருந்தனர். ஆனால் அந்த கவலையின் சுவடு கூட இன்று தெரியவில்லை என்பதும் இன்றைய டாஸ்க்கை அனைவரும் ஜாலியாக அனுபவித்து விளையாடினர் என்பதும் குறிப்பிடத்தக்கது

சரவணனுடன் மொத்தம் ஆறு போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில் தற்போது பத்து போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இன்னும் 55 நாட்கள் மீதமிருப்பதால் வைல்ட் கார்ட் எண்ட்ரி இந்த வாரம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.