close
Choose your channels

மீராமிதுனின் அடுத்த டார்கெட் சேரன்: வனிதாவை விட ஆபத்தானவரா?

Wednesday, July 10, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் வனிதாவைத்தான் அனைவரும் வில்லியாக பார்த்து வருகிறோம். ஆனால் வனிதா வாயாடியாக இருந்தாலும் அவரிடம் ஒரு சின்ன வெகுளித்தனமும் இருக்கும். வந்த சண்டையை விடமாட்டாரே தவிர அவரிடம் நரித்தனமாக எண்ணங்கள் இல்லை. ஆனால் மீராமிதுன் அப்படியில்லை.

பிக்பாஸ் வீட்டில் யாருக்கெல்லாம் வெற்றி வாய்ப்பு உள்ளது என்பதை கணித்து அவர்களின் இமேஜை கொஞ்சம் கொஞ்சமாக உடைக்கும் தந்திரத்தை கையாண்டு வருகிறார். இதற்காக அவர் தற்போது வனிதா டீமை பகடைக்காயகவும் பயன்படுத்தி வருவது போல் தெரிகிறது.

லாஸ்லியாவுக்கு மக்கள் செல்வாக்கு அதிகம் இருப்பதை அறிந்து கொண்ட மீரா, அவரை நாமினேட் செய்ததோடு, அவரிடம் நட்பு குறித்து விளக்கம் அளித்து தனக்கு துரோகம் செய்துவிட்டதாக குற்றஞ்சாட்டினார். ஆனால் மீராவின் தந்திரத்தை சரியாக புரிந்து கொண்ட லாஸ்லியா, மீராவுக்கு பதிலடி கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.

தற்போது பிக்பாஸ் வீட்டில் கடுமையான போட்டியை தரக்கூடியவர் என்று கூறப்படும் சேரனை மீரா அடுத்த டார்கெட்டாக வைத்துள்ளார். சாதாரண ஒரு காரணத்திற்காக சேரனை வம்புக்கு இழுத்து அவரை டென்ஷனாக்கியுள்ளார். இந்த காட்சியை பார்ப்பவர்கள் சேரன் கோபக்காரர் என்ற இமேஜை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவரது திட்டமாக இருக்கலாம், அல்லது பிக்பாஸ் டீமின் திரைக்கதையின் ஒரு பகுதியாக கூட இருக்கலாம்.

எனவே வனிதாவால் பல பிரச்சனைகள் ஏற்படுவது உண்மையாக இருந்தாலும் அவரை விட ஆபத்தானவர் மீரா. எனவே இந்த வாரம் எவிக்சனில் சிக்கியுள்ள மீராவை வெளியேற்ற வேண்டும் என்பதே மக்களின் எண்ணமாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.