close
Choose your channels

வனிதா-கஸ்தூரி மோதல்: நாய், பூனை, குரங்காக மாறிய ஹவுஸ்மேட்ஸ்

Wednesday, August 21, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் வனிதாவும் கஸ்தூரியும் வருவதற்கு முன் ஹவுஸ்மேட்ஸ்களிடையே சண்டை சச்சரவு இருந்தாலும், அதிலும் ஒரு சுவாரஸ்யம் இருந்தது. ஆனால் இருவரும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் வீட்டிற்குள் எண்ட்ரி ஆனவுடன் இருவரில் யார் பெரியவர் என்ற ஈகோ காரணமாக தினமும் மோதி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று கிண்டர் கார்டன் பள்ளி டாஸ்க்கில் இருவரும் மோதிய நிலையில் இன்று மீண்டும் அதே பிரச்சனையை வைத்து இருவரும் சண்டை போட இந்த சண்டையை வேடிக்கை பார்த்தவாறு கேலி செய்யும் மற்ற ஹவுஸ்மேட்ஸ்கள் நாய், பூனை, குரங்கு போல் நடிப்பதாக இரண்டாவது புரமோ உள்ளது.

ஒரே வாரத்தில் இருவரை எவிக்ட் செய்யும் வகையில் பிக்பாஸ் புதிய விதி ஒன்றை உருவாக்கி வனிதா, கஸ்தூரி இருவரையும் வெளியேற்றினால் மீதமுள்ள நாட்களிலாவது நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருக்கும் என பார்வையாளர்கள் கருதும் அளவிற்கு இருவரும் பார்வையாளர்களை வெறுப்பேற்றி வருகின்றனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.