close
Choose your channels

இந்த வாரம் வெளியேறுவது இவரா? ஆரி ரசிகர்களுக்கு ஏமாற்றம்!

Friday, January 1, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் தற்போது வீட்டில் எட்டு போட்டியாளர்கள் உள்ளனர். இன்னும் இறுதிப் போட்டிக்கு இரண்டு வாரங்கள் மட்டுமே இருப்பதால் அதற்குள் நான்கு போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும் இந்த வாரமும் அடுத்த வாரமும் டபுள் எவிக்சன் இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி இந்த வாரம் வாக்குகளின் அடிப்படையில் குறைந்த வாக்குகளை பெற்றவர் ஆஜித் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. எனவே இந்த வாரம் ஆஜித் வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

ஆரியை கடுமையாக விமர்சனம் செய்பவர்கள், அவரிடம் சண்டை போட்டவர்கள் ஆரி ஆதரவாளர்களால் வெளியேற்றப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில் இந்த வாரம் ஆரியை விமர்சனம் செய்த ரம்யாவை வெளியேற்ற ஆரி ரசிகர்கள் தீவிர முயற்சி செய்தனர். இதனை ரம்யாவின் சகோதரரும் மறைமுகமாக ரம்யாவிடம் தெரிவித்தார். ஆனால் இந்த வாரம் ரம்யா தப்பியது ஆரி ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருக்கலாம். ஒருவேளை டபுள் எவிக்சன் இருந்தால் அதில் ரம்யா சிக்குவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.