close
Choose your channels

பிக்பாஸ் வீட்டிற்கு வருமுன் அஜீம்க்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்!

Friday, November 27, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை தாண்டி வெற்றிகரமாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் கடந்த சில நாட்களாக சுவாரஸ்யமான டாஸ்குகள் மூலம் போட்டியாளர்கள் சமயோசிதமாக விளையாடுகின்றனர். பார்வையாளர்களுக்கும் போட்டியாளர்களின் சண்டைகளை பார்ப்பதற்கு ஆர்வ்த்துடன் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

தற்போது பிக்பாஸ் வீட்டில் ஆரி, அனிதா, ரியோ, ஷிவானி, ஆஜித், கேப்ரில்லா, ரமேஷ், ரம்யா, சம்யுக்தா, சோம், நிஷா, பாலாஜி, சனம் மற்றும் அர்ச்சனா ஆகியோர் உள்ளனர் ஏற்கனவே ரேகா, சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா ஆகியோர் வெளியேறிய நிலையில் தொலைக்காட்சி நடிகர் அஜீம் விரைவில் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக உள்ளே வர இருப்பதாகவும் அவர் தற்போது சென்னையில் உள்ள பிரபல ஸ்டார் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டது

இந்த நிலையில் திடீரென அஜீமின் தாயாருக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டதாகவும் இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அஜீமுக்கு தெரிவிக்கப் பட்டது. இதனையடுத்து அவர் ஸ்டார் ஓட்டலில் இருந்து மருத்துவமனைக்கு சென்று தனது தாயாருடன் இரண்டு நாட்கள் இருந்ததாகவும், தற்போது அஜீம் தாயாருக்கு குணமாகி கொண்டு வருவதாகவும் இதனை அடுத்து மீண்டும் ஒட்டலுக்கு திரும்பிய அஜீம், வரும் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை கமல்ஹாசன் முன் வைல்ட்கார்ட் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்கு வருவார் என்றும் கூறப்படுகிறது

பிக்பாஸ் வீட்டில் ஏற்கனவே பாலாஜி-ஷிவானி இடையே காதம் அரும்பியுள்ளதாக கூறப்படும் நிலையில் ஷிவானியுடன் ‘பகல்நிலவு’ என்ற தொலைக்காட்சி தொடரில் காதலராக நடித்துள்ள அஜிம் வரவு, பாலாஜிக்கு அதிருப்தியை ஏற்படுத்துமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.