close
Choose your channels

என்னை உன்கூட உள்ள அனுப்பி சாவடிக்கிறாங்கப்பா! பாலாஜியை புலம்ப வைத்த சுசி!

Friday, November 20, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மணிக்கூண்டு டாஸ்க்கில் சரியாக விளையாடாத பாலாஜி அணியில் உள்ள பாலாஜி, சுசி மற்றும் ரம்யா ஆகியயோர்களில் பாலாஜி, சுசி ஆகிய இருவருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது என்பதை முதல் புரமோவில் பார்த்தோம்

இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் இரண்டாவது புரமோவில் சுசி மற்றும் பாலாஜி பாட்டு பாடி ஜாலியாக இருக்கும் நிலையில் இருவருக்கும் பிக்பாஸ் வீட்டில் உள்ள குரூப் குறித்த உரையாடல் வருகிறது

இந்த வீட்டில் ரெண்டு குரூப் இருக்கு என சுசி கூற அதற்கு ’கேப்டன் ஆஜித் தான் தப்புத்தப்பா ரீசன் கொடுத்தது, ஆஜித்தை தானே நீ குரூப்புன்னு சொல்ற, ஷிவானி எல்லாம் குரூப் கிடையாது, அவளுக்கு ஒரு விஷயம் பிடிக்கலைன்னா, மூஞ்சிக்கு நேரா சொல்லிட்டு போய்கிட்டே இருப்பா என்று பாலாஜி கூற, அதற்கு சுசி, ‘அதனால குரூப்பு கிடையாதுன்னு சொல்ல முடியாது என்று கூற, ’எல்லாரும் சேர்ந்து ஒண்ணா ஒரே ஒரு முடிவு எடுக்குறாங்க பாரு, அதுதான் குரூப்பு’ என்று பாலாஜி மீண்டும் கூற அதற்கு சுசி நீயும் தான் அதேமாதிரி முடிவு எடுத்திருக்க என்று கூற இதனால் கடுப்பான பாலாஜி, ’என்ன உன் கூட உள்ள அனுப்பி சாவடி இருக்காங்கப்பா’ என்று பாலாஜி புலம்ப ஆரம்பித்துள்ளார்

பாலாஜியையே புலம்பவிட்ட சுசி குறித்து நெட்டிசன்கள் கூறும்போது, ‘பாலாஜி சிறையில் இருப்பது கூட தண்டனையில்ல, சுசி கூட இருப்பதுதான் பெரிய தண்டனையாக இருக்கும் என்று பதிவு செய்து வருகின்றனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.