close
Choose your channels

பாலாஜியை கார்னர் செய்யும் போட்டியாளர்கள்: நாட்டாமை அர்ச்சனாவுக்கு பதிலடி

Friday, October 23, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தினந்தோறும் நடைபெற்று வரும் டாஸ்குகள் காரணமாக போட்டியாளர்கள் இடையே சண்டை சச்சரவு வந்து கொண்டிருக்கின்றது என்பது தெரிந்ததே. குறிப்பாக சமீபகாலமாக டாஸ்குகளின்போது பாலாஜி அதிகமாக கோபப்படுவது தெரிகிறது இதனை அடுத்து பாலாஜியை இன்றைய டாஸ்க்கில் அனைத்து போட்டியாளர்களும் கார்னர் செய்கின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் மைனஸை குறிப்பிட்டு இரண்டு போட்டியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அதில் பெரும்பாலானோர் பாலாஜி பெயரை குறிப்பிடுவதால் அவரை கார்னர் செய்வது போல் தெரிகிறது. பாலாஜியை அனைவரும் தேர்வு செய்ய அவரது கோபம் தான் காரணம் என அர்ச்சனா கூற அதற்கு பாலாஜி கோபப்படுவதும் என்பது தவறான விஷயம் அல்ல என்றும், கோபப்படாமல் தன்னால் இருக்க முடியாது என்று கூறி பதலடி தருகிறார்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா வந்ததில் இருந்தே அவர் தன்னை தானே நாட்டாமை என்று நினைத்துக் கொண்டு அனைத்து விஷயங்களிலும் தலையிட்டு வருகிறார். அவருடைய இந்த போக்கு சுரேஷ், பாலாஜி, உள்பட ஒரு சிலருக்கு பிடிக்காததால் நேரடியாகவும் மறைமுகமாகவும் இதனை சுட்டிக் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் அர்ச்சனா தன்னைப்பற்றி கூறிய கமெண்ட்டுக்ககு பாலாஜி பதிலடி கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.