close
Choose your channels

அபிஷேக்கிற்கு மரண பயத்தை காட்டிய கமல்ஹாசன்!

Sunday, October 24, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் ஒருவர் இன்று வெளியேற இருக்கும் நிலையில் வெளியேறும் போட்டியாளர் யார் என்பதைக் கூறும் கமலஹாசனின் மூன்றாவது புரமோ சற்று முன் வெளியாகி உள்ளது

இந்த புரமோவில் அபிஷேக் மற்றும் சின்னப்பொண்ணு ஆகிய இருவரில் ஒருவர் வெளியேற போகிறார்கள் என்று கமல்ஹாசன் கூற அந்த இருவரில் யார் வெளியேற போகிறார்கள் என்பதை இன்னும் சற்று நேரத்தில் கூறப் போகிறேன் என்று கமல்ஹாசன் கூறுகிறார்

அப்போது சின்ன பொண்ணு சிரித்தபடியே எதையும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கும் நிலையில் அபிஷேக் சோகத்துடனும், பயத்துடனும் உட்கார்ந்திருப்பதை பார்க்கும்போது அவரது மனதில் ஒரு மரண பயம் ஏற்பட்டது போன்ற ஒரு உணர்வை அவரது முகத்தில் பார்க்க முடிகிறது என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றார்கள்

ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் வெளியான செய்தியின் படி இன்று அபிஷேக் வெளியேறி விட்டதாக கூறப்படும் நிலையில் இன்று இரவு நிகழ்ச்சியின்போது அபிஷேக் உண்மையிலேயே வெளியேறிவிட்டாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.