பாவனியை சமாளிக்க முடியாமல் திணறுகிறாரா ராஜூ?

பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 45வது நாளை எட்டியுள்ள நிலையில் இந்த 45 நாட்களில் போட்டியாளர்களுக்கு இடையே பல சண்டை சச்சரவுகள் நடந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கடந்த சில நாட்களாகவே ராஜு ஜெயமோகன் மற்றும் பாவனி ஆகியோர் இடையே அவ்வப்போது சின்னச் சின்ன கருத்து மோதல்கள் ஏற்பட்ட நிலையில் இன்று அந்த மோதல் பெரிதாவது போல் தெரிகிறது

இன்றைய 2-வது புரமோவில், ‘என்னை பற்றி எப்போதுமே ஒருசில தப்பான வார்த்தைகள் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் என்றும், மற்றவர்களை பற்றி எல்லாம் நல்ல விதமாக சொல்லும் நீங்கள், என்னை பற்றி மட்டும் ஏன் இப்படி சொல்கிறீர்கள் என்று பாவனி கேட்க அதற்கு விளக்கம் அளிக்கும் ராஜூ, ‘உன்னை பற்றி ஒரு சந்தேகமான பார்வையுடன் நினைத்து உன்னுடன் பேசுவது தான் தவறு, ஆனால் நான் உன்னிடம் இருந்து விலகி இருக்கின்றேன்’ என்று கூறி மழுப்புகிறார். இதில் இருந்து பாவனி கேட்கும் நேரடி கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் ராஜூ திணறுவதாக நெட்டிசன்களின் கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.

இன்றைய புரமோவில் இருந்து ராஜூ மற்றும் பாவனி இடையே ஒரு வார்த்தைப்போர் நடைபெற வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

More News

நடிகை ரோஜாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய நீண்டநாள் தோழி நடிகை!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் நடிகை ரோஜா.

வளைகாப்பு விழாவில் கணவருடன் செம ஆட்டம் போட்ட நடிகை!

இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கிய 'ஈரநிலம்', 'ரிதம்', 'ராவண தேசம்' உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்தவர் நடிகை ஜெனிபர்.  இவர் தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

சிவகார்த்திகேயன் அடுத்த படத்திற்கு இசையமைப்பாளர் இவரா? அதிரடி தகவல்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளிவந்திருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூர்யாவின் பாதுகாப்பு குறித்து உளவுத்துறை கூறிய முக்கிய தகவல்!

'ஜெய்பீம்' பட சர்ச்சை தொடர்பாக சென்னையில் உள்ள நடிகர் சூர்யா வீட்டிற்கு உளவுத்துறை அளித்த தகவலின்படி துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

என்னைப்பத்தி நீ என்ன தான் நினைச்சுகிட்டு இருக்கே? ராஜூவுடன் மோதும் பாவனி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 'உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி' என்ற டாஸ்க் போட்டியாளர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது என்பதும் இந்த டாஸ்க்கில் நேற்று அபினய் மற்றும் நிரூப் ஆகிய இருவருக்கும்