close
Choose your channels

சூர்யாவின் பாதுகாப்பு குறித்து உளவுத்துறை கூறிய முக்கிய தகவல்!

Wednesday, November 17, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’ஜெய்பீம்’ பட சர்ச்சை தொடர்பாக சென்னையில் உள்ள நடிகர் சூர்யா வீட்டிற்கு உளவுத்துறை அளித்த தகவலின்படி துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சூர்யா நடித்து தயாரித்த ஜெய்பீம் படம் குறித்த சர்ச்சை கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக ஒரு சிலர் கூறியதை அடுத்து சூர்யாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக ஜெய்பீம் படம் தொடர்பாக ஆவேசமான கருத்துக்களை ஒருசிலர் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பாக சூர்யா மீது தனிப்பட்ட தாக்குதல் விடுக்கும் விதத்தில் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னை தி நகரில் உள்ள ஆற்காடு தெருவில் உள்ள நடிகர் சூர்யாவின் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உளவுத் துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஆயுதப்படை போலீசார் 5 பேர் இருபத்திநான்கு மணிநேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு ஈடுபடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தரப்பிலிருந்து பாதுகாப்பு கேட்டு எந்த புகாரும் அளிக்கப்படவில்லை என்றும், இருப்பினும் உளவுத்துறை தகவலின்படி போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.