close
Choose your channels

இன்று கமலிடம் சிக்கியவர் ராஜூவா? 

Sunday, December 5, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் கடந்த 60 நாட்களுக்கும் மேலாக தொகுத்து வழங்கி வருகிறார் என்பதும் அவர் மிகவும் சாதுரியமாக, தந்திரமான வார்த்தைகளை பயன்படுத்தி ஒவ்வொரு போட்டியாளர்களையும் அவர்கள் செய்த தவறுகளை சுட்டிக் காட்டுகிறார் என்பதும் அதே சமயம் வெளிப்படையாக போட்டியாளர்கள் செய்யும் நல்ல விஷயங்களை பாராட்டுகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் நேற்று பிரியங்கா, இமான் ஆகிய இருவருக்கும் சில அறிவுரைகளை கூறிய கமல்ஹாசன், தாமரை மற்றும் அமீரையும் பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் கமல்ஹாசனிடம் சிக்கியிருப்பவர் ராஜு போல் தெரிகிறது.

பிரேக்கிங் நியூஸ் டாஸ்க்கில் ராஜு தன்னை முன்னிலைப்படுத்தி மற்றவர்களை பின்வாங்க செய்துவிட்டார் என்ற குற்றச்சாட்டை வைக்கிறார் கமல். அப்போது ராஜூ, ‘நான் அப்படி பண்ண வேண்டும் என்று நினைக்கவில்லை’ என்று கூற ’இதுகுறித்து நடுவரிடமே கேட்டுவிடலாம் என்று கமல் கூற அதற்கு நடுவர் சஞ்சீவ், ராஜுவின் தொகுப்பு மிகவும் அமெச்சூர்தனமாக இருந்தது என்று கூறினார்.

இதற்கு ராஜு, ‘எங்கள் டீம் சரியாக ஒத்துழைக்கவில்லை என்று கூறியப்போது ’நீங்கள் பாராட்டை ஏற்றுக் கொள்வது மாதிரி விமர்சனங்களை ஏற்றுக் கொண்டால் உங்களுடைய மனதிற்கு திருப்தியாக இருக்கும்’ என்று கமல்ஹாசன் கூறுகிறார். மொத்தத்தில் இன்றைய நிகழ்ச்சியில் கமல்ஹாசனிடம் சிக்கியவர் ராஜூ என்று இந்த புரமோவில் இருந்து தெரிய வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.