close
Choose your channels

பிக்பாஸ் வீட்டில் முதல்முறையாக துப்பாக்கி சூடு: கமல் அதிர்ச்சி தகவல்

Saturday, October 9, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 5 நாட்களாக விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இன்று 6வது நாள் கமல்ஹாசன் தோன்றும் நாள் என்பதால் வழக்கத்தைவிட விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய முதல் புரோமோ வந்தபோது அதில் நமீதா மாரிமுத்து இல்லாததை கண்டு ரசிகர்கள் கடும் அதிர்ச்சியாகி உள்ளனர் என்பதும் இது குறித்த தகவல் இரண்டாவது புரமோவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த தகவல் இரண்டாவது புரமோவில் இல்லை என்றாலும் இரண்டாவது புரமோவில் நமீதா இல்லாதது அவர் வெளியேறி விட்டதை உறுதி செய்வதாகவே தெரிகிறது.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியாகியுள்ள இரண்டாவது புரமோவில் கமலஹாசன் ஒரு சில போட்டியாளர்கள் குறித்த காமெடியாக கூறிவருகிறார். அதன்படி ’என்ன பிரியங்கா நீங்க கேஸ் வழியாகவே கதை சொல்கிறீர்கள் போல என்று பிரியங்காவை கலாய்த்தபின், இமான் அண்ணாச்சி குறித்து கூறிய போது ’எனக்கு ஒரு சின்ன பதட்டம் என்னவென்றால் நீங்கள் இங்கிலீஷ் கத்துக்கிறேன் என்ற பேரில் வட்டார வழக்கை அவர் மறந்து விடுவாரோ என்ற பயம் உள்ளது என்று கூறினார்.

மேலும் அவர் இந்த வீட்டில் முதல் முறையாக துப்பாக்கி சூடு நடப்பதற்குக் காரணமாக இருக்கும் ஒருவர் அபிஷேக் என்று கூறியதோடு ’தூங்காதே தம்பி தூங்காதே’ என்றும் கூறுகிறார். அத்துடன் இன்றைய இரண்டாவது புரமோ முடிவுக்கு வந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.