close
Choose your channels

டிக்கெட் டு ஃபினாலே: பிரியங்காவை குறிவைக்கும் போட்டியாளர்கள்!

Wednesday, December 29, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் தற்போது நடைபெற்று வரும் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதும் முதல் நாளில் நிரூப் வெளியேற்றப்பட நிலையில் நேற்றைய டாஸ்க்கில் பாவனி மற்றும் தாமரை ஆகிய இருவரும் வெளியேற்றப்பட்டனர்.

இந்த நிலையில் மீதி உள்ள ஐந்து பேர்களுக்கு இன்று புதிய டாஸ்க் வழங்கப்படுகிறது. ஒவ்வொருவரின் கட்டவுட் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த கட் அவுட்டில் உள்ளவர்களில் ’சின்ன பிரச்சனையை பெரிய பிரச்சனையாக மாற்றியவர் யார்’ என்று முடிவு செய்து அவர் மீது கலர் திரவத்தை எறிய வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்படுகிறது.

இதில் பிரியங்கா குறி வைக்கப்படுவது போல் தெரிகிறது. ராஜு மற்றும் சஞ்சீவ் ஆகிய இருவரும் பிரியங்கா மீது எறிகின்றனர். பிரியங்கா ராஜுவின் கட் அவுட் மீது எறிகிறார். சிபி, ராஜூ மீது, பிரியங்கா மீதும் மாற்றி மாற்றி எறிகின்றனர். மேலும் இதுகுறித்து சிபி மற்றும் பிரியங்கா ஆகியோர் இடையே வாக்குவாதம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த டாஸ்க்கில் 2 பேர் வெளியேற்றப்படுவார்கள் என பிக் பாஸ் அறிவித்திருக்கும் நிலையில் அடுத்த சுற்றுக்கு செல்லும் மூவர் யார் என்பதை அடுத்த புரமோ அல்லது இன்றைய நிகழ்ச்சியை பார்த்து தெரிந்து கொள்வோம். மொத்தத்தில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் வென்று நேரடியாக இறுதிப்போட்டிக்கு செல்வது யார்? என்பதை தெரிந்துகொள்ள பிக்பாஸ் பார்வையாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.