close
Choose your channels

சிம்புவிடம் இருந்து பிக்பாஸ் அல்டிமேட் டைட்டில் வின்னர் பட்டத்தை பெற்றவர் யார்? ரன்னர் யார்?

Monday, April 11, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி நடைபெற்றது. பாலாஜி, நிரூப், தாமரை மற்றும் ரம்யா பாண்டியன் ஆகிய நால்வர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்த நிலையில் முதலாவதாக தாமரை 4வது இடத்தை பெற்று வெளியேறினார் .

அதன் பின்னர் பாலா, நிரூப் மற்றும் ரம்யா பாண்டியன் ஆகிய மூவரில் டைட்டில் வின்னர் யார் என்பதை அறிவிக்கும் பொறுப்பு சிம்புவுக்கு கொடுக்கப்பட்டது. வைல்ட்கார்ட் எண்ட்ரியான ரம்யா பாண்டியன் மூன்றாவது இடத்தை பெற்றதாக அறிவித்த சிம்பு, அதன்பிறகு முதலிடத்தை பெற்று டைட்டில் வின்னர் பட்டத்தை பாலா பெறுவதாக அறிவித்தார். இதனையடுத்து அவருக்கு ரூபாய் 20 லட்சம் பரிசும் பிக்பாஸ் கோப்பையும் வழங்கப்பட்டது. இரண்டாவது இடத்தை பெற்று ரன்னர் என்ற தகுதியை நிரூப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தைப் பெற்ற பாலா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் பட்டத்தை வென்றுள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.