close
Choose your channels

'பிகில்' படத்திற்கு முந்தைய பகுதி! அட்லியின் பதில்!

Saturday, October 26, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள ’பிகில்’ திரைப்படம் நேற்று வெளியாகி உலகம் முழுவதும் திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது. இந்த படத்தை பார்த்த விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக ராயப்பன் கேரக்டர் விஜய் ரசிகர்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்துள்ளதாக தெரிகிறது.

ஒருசில ஊடகங்கள் இந்த படத்திற்கு கலவையான விமர்சனத்தை தந்து கொண்டிருந்தாலும் இந்த படத்தில் இடம்பெற்ற ராயப்பன் கேரக்டர் அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த கேரக்டரை விஜய் தனது நடிப்பால் நன்றாக மெருகேற்றி உள்ளதாகவும் கூறி வருகின்றன

இந்த நிலையில் விஜய் ரசிகர் ஒருவர் இயக்குனர் அட்லிக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். ராயப்பன் கேரக்டரின் இளவயது பருவம் குறித்த ஒரு திரைப்படம் எடுக்க வேண்டும் என்றும் அதாவது ’பிகில்’ படக்கதையின் முந்தைய பகுதியை ஒரு படமாக எடுக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த வேண்டுகோளுக்கு பதில் அளித்துள்ள இயக்குநர் அட்லி ’செஞ்சிட்டா போச்சு’ என்று கூறியுள்ளார்

பொதுவாக ஒரு படத்தின் இரண்டாம் பாகம் தான் உருவாக்கப்படும். ஆனால் ’பிகில்’ படத்தின் முந்தைய பாகமாக ராயப்பனின் இளவயது கேரக்டர் குறித்த திரைப்படம் உருவாக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.