close
Choose your channels

கொரோனாவுக்கு மருந்தாக கோமியம் குடிக்க வைத்த பாஜக நிர்வாகி கைது!

Wednesday, March 18, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக தாக்கி வரும் நிலையில் இந்த வைரசை கட்டுப்படுத்துவதற்காக மருந்து கண்டுபிடிக்க முடியாமல் விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் திணறி வருகின்றனர். இந்த நிலையில் எந்தவித அறிவியல் ஆதாரமும் இன்றி மாட்டு கோமியம் குடித்தால் கொரோனா வைரஸ் கட்டுப்படும் என்றும் ஒரு சிலர் வதந்தியை கிளப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் வடக்கு கொல்கத்தாவைச் சேர்ந்த பாஜக நிர்வாகி நாராயணன் சட்டர்ஜி என்பவர் கொரோனா பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் என கூறி பொதுமக்களுக்கு மாட்டு கோமியம் வழங்கியதாக தெரிகிறது. சீருடையில் இருந்த பாதுகாவலர் ஒருவருக்கும் அவர் மாட்டு கோமியத்தை கட்டாயப்படுத்தி குடிக்க வைத்ததாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து அந்த பாதுகாவலர் அளித்த புகாரின் அடிப்படையில் பாஜக நிர்வாகி நாராயணன் சட்டர்ஜி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இதுகுறித்து மேற்கு வங்க மாநில பாஜக பொதுச் செயலாளர் கூறியபோது ’நாராயணன் சட்டர்ஜி பாஜக நிர்வாகி தான் என்றாலும் இந்த நிகழ்விற்கும் பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் என மாட்டு கோமியம் குடிக்க வைத்த பாஜக நிர்வாகியை போலீஸார் கைது செய்து இருப்பது மேற்குவங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.