close
Choose your channels

திருமணத்திற்கு பின்னரும் கள்ளத்தொடர்பு வைத்திருந்தேன்: பிரபல நடிகை பேட்டி

Sunday, May 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திருமணத்திற்கு பின்னர் இன்னொருவருடன் கள்ள தொடர்பு வைத்திருந்தேன் என்றும் எனது கணவரும் இன்னொரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தார் என்றும் பிரபல நடிகை ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடந்த 1960கள் மற்றும் 70களில் பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகையாக இருந்தவர் பழம்பெரும் நடிகை மும்தாஜ். பல வெற்றி படங்களில் நடித்த மும்தாஜ், திடீரென திரையுலகில் இருந்து விலகி, அதன் பின் நீண்ட இடைவெளிக்கு பின் 1990ஆம் ஆண்டு ஒரு படத்தில் மும்தாஜ் நடித்தார்.

இந்த நிலையில் கடந்த 1974-ஆம் ஆண்டு மயூர் மதுவனி என்பவரை திருமணம் செய்து கொண்ட மும்தாஜ் கணவருடன் அமெரிக்காவில் செட்டிலானார். இந்த நிலையில் அமெரிக்காவில் தனது கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததை அவரே தெரிவித்ததாகவும் இதனால் ஏற்பட்ட மன கஷ்டம் காரணமாக இந்தியா திரும்பியதாகவும் மும்தாஜ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அப்போது இந்தியாவில் தனக்கு இன்னொருவருடன் தொடர்பு ஏற்பட்டதாகவும் ஆனால் அந்த தொடர்பு நெடுநாள் நீடிக்க வில்லை என்றும் விரைவில் முடிந்து விட்டது என்றும் அவர் கூறினார். இந்த நிலையில் தற்போதும் தனது கணவர் தன்னை காதலித்து வருவதாகவும் அதனால் தான் அதிர்ஷ்டசாலி என்றும் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.