close
Choose your channels

போதைப்பொருள் விவகாரம்: கணவருடன் காமெடி நடிகை கைது!

Sunday, November 22, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில வாரங்களாக இந்திய திரை உலகில் போதைப்பொருள் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது என்பதும் பாலிவுட் நடிகை ரியோ சக்கரவர்த்தி மற்றும் கன்னட நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது போதைப்பொருள் விவகாரத்தில் மேலும் ஒரு நடிகை கணவருடன் கைது செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகைகள் உள்பட திரையுலகினர்களிடம் போதைப்பொருள் பரவி வருவது குறித்தும் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். அப்போது ஏற்கனவே கைது செய்யப்பட்ட ஒருவரிடம் விசாரணை செய்து கொண்டிருந்தபோது பாலிவுட் காமெடி நடிகை பாரதிசிங் வீட்டில் கஞ்சா இருப்பதாக தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து பாரதிசிங் வீட்டில் போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது அவரது வீட்டில் 86.5 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாகவும் இதனை அடுத்து விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட பாரதிசிங், விசாரணைக்குப் பின் அவர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

காமெடி நடிகை பாரதிசிங்கை அடுத்து அவரது கணவரும் கஞ்சா பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரும் நேற்று கைது செய்யப்பட்டார். போதைப்பொருள் விவகாரத்தில் காமெடி நடிகை பாரதிசிங் தனது கணவருடன் கைது செய்யப்பட்டிருக்கும் தகவல் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.