close
Choose your channels

7 வருடங்களுக்கு பின் சுந்தர் சியுடன் இணையும் இசையமைப்பாளர்

Monday, February 3, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சுந்தர் சி இயக்கிய வெற்றிப் படங்களான அரண்மனை மற்றும் 'அரண்மனை 2’ ஆகிய படங்களை அடுத்து ’அரண்மனை 3’ திரைப்படம் விரைவில் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் ’அரண்மனை 3’படத்தில் ஆர்யா மற்றும் சுந்தர் சி முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் ராஷிகன்னா மற்றும் ஆண்ட்ரியா ஆகியோர் நாயகிகளாக நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தது.

இந்த நிலையில் 'அரண்மனை 3’ படத்த்ஹின் இசையமைப்பாளர் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இசையமைப்பாளர் சி.சத்யா இந்த படத்திற்கு இசையமைக்கவிருப்பதாகவும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. சி.சத்யா ஏற்கனவே சுந்தர் சி இயக்கத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளிவந்த ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்திற்கு இசையமைத்திருந்தார் என்பதும் ஏழு வருடங்களுக்கு பின் மீண்டும் அவர் சுந்தர் சியுடன் இணைகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.