close
Choose your channels

'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பில் ஏற்பட்ட உயிரிழப்பு: மணிரத்னம் மீது வழக்கு!

Friday, September 3, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் உருவாகி வருகிறது என்பதும் இதில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலர் நடித்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.

சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது என்பதும் அதன் பின்னர் புதுச்சேரியில் நடந்த நிலையில் தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த மாதம் ஐதராபாத்தில் ’பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு நடந்தபோது சிறு விபத்து ஏற்பட்டதாகவும் இந்த விபத்தில் குதிரை ஒன்று உயிரிழந்ததாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து மெட்ராஸ் டாக்கீஸ் உரிமையாளர் மணிரத்னம் மீதும், குதிரை உரிமையாளர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருப்பதாகவும் இது குறித்து விலங்குகள் நல வாரியம் விசாரணை செய்யுமாறு மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தெலுங்கானா விலங்குகள் நல வாரியம் கடிதம் எழுதியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

’பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பில் குதிரை ஒன்று இறந்ததை அடுத்து மணிரத்னம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.