close
Choose your channels

சசிகுமார் உறவினர் அசோக் தற்கொலை: திரையுலக பிரபலங்கள் இரங்கல்

Wednesday, November 22, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சசிகுமாரின் நெருங்கிய உறவினரும் அவருடைய கம்பெனி புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் நிர்வாகியுமான அசோக்குமார் நேற்று மாலை பைனான்சியர் ஒருவரின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலைக்கு முன் அவர் சசிகுமாருக்கு எழுதிய கடிதத்தில் உருக்கமான பல தகவல்களை தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அசோக்குமாரின் துயரமான முடிவு தமிழ் திரையுலகினர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. பல திரையுலக பிரபலங்கள் கந்துவட்டி பைனான்சியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் அசோக் குமாரின் மரணம் குறித்து திரையுலகினர் கூறியதை பார்ப்போம்

கெளதம் மேனன்: அசோக் உன்னுடைய மரணம் ஈவிரக்கம் அற்ற ஒரு பணப்பிசாசை அடக்கப் பயன்படக்கூடும் என்பதை அறிவேன்... ஆனால்... நீ உயிரோடிருந்து இந்தப் போராட்டத்தை நடத்தியிருக்க வேண்டும் என்பதையே நாங்கள் விரும்பியிருப்போம்...

சுசீந்திரன்: அசோக் அண்ணனின் மரணம் என்னை பெரிதும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதற்கு காரணமான மதுரை அன்பு தண்டிக்கப்பட வேண்டும். மதுரை அன்புவால் நடந்து கொண்டிருக்கும் தற்கொலைகள் தடுக்கப்பட வேண்டும். சசிகுமார் அண்ணனுக்கும் கதிர் அவர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்

நடிகர் கிருஷ்ணா: தமிழ் சினிமாவின் கருப்பு தினம், அசோக் குமாரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்

இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன்: கம்பெனி புரடொக்சன்ஸ் அசோக் குமாரின் மரணத்திற்கு நீதிகேட்க அனைவரும் ஒன்றிணையும் சரியாக காலம் இது

நடிகர் கலையரசன்: அசோக் சாரின் இழப்பு மன உளைச்சலில் ஆழ்த்தியிருக்கிறது. அசோக் சாருக்காக என்னிடம் மிஞ்சியிருப்பது கண்ணீரும் ஆறுதல்களும் மட்டுமே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.