close
Choose your channels

மதுரவாயல் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டது சென்னை கல்லூரி மாணவியா? திடுக்கிடும் தகவல்

Friday, March 15, 2019 • தமிழ் Comments
ATM
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை மதுரவாயல் அருகே உள்ள ஏடிஎம் ஒன்றில் கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இருவர் ஏடிஎம்-இல் பணம் நிரப்பி கொண்டிருந்த ஊழியர்களை கத்தியால் தாக்கி கொள்ளையடித்தனர். கொள்ளையர்கள் ஹெல்மெட் போட்டிருந்ததால் அவர்கள் யார்? என்பதை சிசிடிவி காட்சியின் மூலமும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் இந்த கொள்ளையர்களை பிடிக்க காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். போலீசாரின் தீவிர விசாரணையில் இன்று இந்த கொள்ளையில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மூவரில் ஒருவர் சென்னை கல்லூரியில் படித்து வரும் மாணவியும் என்பது குறிப்ப்பிடத்தக்கது.

இந்த கொள்ளையில் ஈடுபட்ட அக்யோ மாயே, அமு, கிரியா ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களில் அக்யோ மாயே, அமு ஆகிய இருவரும் நைஜீரியாவை சேர்ந்தவர்கள் என்பதும், கிரியா என்பவர் சென்னை கல்லூரி மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்கள் மூவரிடமும் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.