close
Choose your channels

மாஜி அமைச்சர் மணிகண்டனின் மனு தள்ளுபடி.....!

Friday, June 25, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகையளித்த புகாரின் பேரில் கைதான மாஜி அமைச்சர் மணிகண்டனின், ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

நடிகை சாந்தினி பிரச்சனை:

நடிகை சாந்தினியை திருமணம் செய்துகொள்வதாக கூறி முன்னாள் அமைச்சர் மணிகண்டன், அவருடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார். இதனால் நடிகை கருவுற்ற நிலையில், தொடர்ந்து மூன்று முறை சட்டவிரோதமான முறையில் கட்டாய கருக்கலைப்பு செய்துள்ளனர். அமைச்சருக்கு ஏற்கனவே திருமணமான நிலையில், கட்சி கூட்டங்களுக்கு செல்லும்போது சாந்தினியைத்தான் தன்னுடைய மனைவி என்றும் எல்லோரிடமும் அறிமுகம் செய்துள்ளார். இந்தநிலையில் நடிகை, அமைச்சரை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியதால், உன்னுடைய அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு விடுவேன் என்று மணிகண்டன் மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சாந்தினி அடையார் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதன் அடிப்படையில் காவல் துறையினர் பாலியல் வன்கொடுமை, தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து மணிகண்டனின் முன் ஜாமீன் மனுவை, ஜூன் 16ஆம் தேதி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதன்பின் தலைமறைவாகி இருந்த மணிகண்டனை, அடையார் மகளிர் காவல் துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்த நிலையில் கடந்த ஜூன்-20 ஆம் தேதி காவல் துறையினர் பெங்களூரில் ரகசிய இடத்தில் இவரை கைது செய்தனர். தற்போது நீதிமன்ற சிறையில் இவர் அடைக்கப்பட்டுள்ளார்.

ஆதாரங்கள் :

இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், மணிகண்டனின் ஜாமீன் மனு குறித்த வழக்கு, நீதிபதி செல்வகுமார் தலைமயில் விசாரணைக்கு வந்தது.

மணிகண்டன் சார்பாக பேசிய வக்கீல் வாதிட்டதாவது, "சாந்தினி கர்ப்பமானதற்கும், அமைச்சருடன் பழகியதற்குமான ஆதாரங்கள் எதுவும் இல்லை. விளக்கம் இல்லாமல் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளதால், ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது.

காவல்துறை சார்பாக ஆஜரான அரசு குற்றவியல் வழக்கறிஞர் இ.ஜெய்சங்கர் கூறியிருப்பதாவது, "மணிகண்டன், சாந்தினியை தன்னை விட்டுபோகக் கூடாது என வாட்ஸ்அப்பில் மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் ஆபாச புகைப்படங்களை அனுப்பியுள்ளார் என்று அறிக்கையை தாக்கல் செய்தார். இவர்கள் ஒன்றாக இருந்ததற்கான ஆதாரங்களும், சாட்சிகளின் வாக்குமூலங்கள் வாங்கப்பட்டதாகவும் இவர் கூறினார். கைதான மணிகண்டனை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்பதால் ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மணிகண்டனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.