close
Choose your channels

'கத்தி'க்கு பதில் கவுண்டமணிக்கு தாவுகிறாரா சிரஞ்சீவி?

Tuesday, November 24, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த செப்டம்பர் மாதம் வெளியான கவுண்டமணியின் ரீஎண்ட்ரி படமான '49ஓ' திரைப்படம் விமர்சகர்கள் மற்றும் ஊடகங்களின் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி படமாக அமைந்தது. அறிமுக இயக்குனர் ஆரோக்கியதாஸ் இயக்கியிருந்த இந்த படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி தனது 150வது படமாக விஜய் நடித்த 'கத்தி' படத்தின் ரீமேக்கில் நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி அவர் '49ஓ' படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

விவசாயிகள் பிரச்சனை, ரியல் எஸ்டேட் பிரச்சனை, தேர்தல் கமிஷனின் 49ஓ என பல சர்ச்சைக்குரிய விஷயங்கள் அடங்கியிருக்கும் இந்த படத்தில் அரசியல்வாதியான சிரஞ்சீவி நடித்தால் கண்டிப்பாக பரபரப்பாக பேசப்படும் என்றும், எனவேதான் சிரஞ்சீவி இந்த படத்தில் நடிக்க விரும்புவதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இன்னொரு தரப்போ '49ஓ' படத்தின் ரீமேக் குறித்து சிரஞ்சிவி எதுவும் பேசவில்லை என்றும் இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை பெற மற்றொரு நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.