close
Choose your channels

முன்னணி நடிகர், நடிகையை இயக்கி வரும் இயக்குனர் பாலியல் வழக்கில் கைது!

Tuesday, March 8, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முன்னணி நடிகர் நடிகை நடித்து வரும் படத்தை இயக்கி வரும் இயக்குனர் பாலியல் வழக்கில் திடீரென கைது செய்யப்பட்டதால் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வரும் நிவின் பாலி நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் ’அசுரன்’ நாயகி மஞ்சுவாரியார் நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தை லிஜு கிருஷ்ணா என்பவர் இயக்கி வருகிறார். 'படவெட்டு’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென கண்ணூர் மாவட்ட போலீசார் இயக்குனர் லிஜு கிருஷ்ணாவை கைது செய்தனர்.

தன்னுடன் பணியாற்றிய பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் கண்ணூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் அந்தப் புகாரின் அடிப்படையில் இயக்குனர் லிஜு கிருஷ்ணா கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இயக்குனர் லிஜு கிருஷ்ணா கைது காரணமாக படப்பிடிப்பு பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் நடிகைகள் இந்த வழக்கு முடியும் வரை லிஜு கிருஷ்ணாவுக்கு தடை விதிக்க வேண்டும் என இயக்குனர் சங்கத்திடம் கோரிக்கை வைத்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.