close
Choose your channels

நாங்க ஏழைங்க… அப்படித்தான் இருப்போம்… செருப்புடன் ஒப்பிட்ட ஆ.ராசாவுக்கு முதல்வர் பதிலடி!

Friday, March 26, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சரான ஆ.ராசா கூட்டம் ஒன்றில் பேசியபோது, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை திமுக முதல்வர் வேட்பாளர் ஸ்டாலினின் செருப்புடன் ஒப்பிட்டு பேசியதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக சமூக நீதி காவலன் எனத் தன்னைக் கூறிக் கொள்ளும் ஆ.ராசா இப்படி சொல்லலாமா? ஒரு முதல்வரை இப்படி விமர்சனம் செய்வது முறையா? என பல்வேறு சரமாரிக் கேள்விகளை அதிமுக கட்சின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் எழுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று மதுரையில் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட தமிழக முதல்வர், ஆ.ராசாவின் பேச்சை குறிப்பிட்டு, “ஏழைகள் மற்றும் விவசாயிகளின் நிலை அப்படித்தான். நானும் அப்படியே இருந்துவிட்டு போகிறேன். 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி கொள்ளையடித்தவர்கள் அப்படித்தான் பேசுவார்கள். கண்ணுக்கு தெரியாத காற்றில் கூட ஊழல் செய்தவர்கள் திமுகவினர்” எனக் கடும் பதிலடி கொடுத்து இருந்தார்.

தமிழகச் சட்டப்பேரவைத் தேர்லுக்கு இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில் எதிர்க்கட்சிகள் இரண்டும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அதிலும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கும் வாக்குறுதிகளை வைத்து இருக்கட்சிகளும் கடும் விவாதத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின்போது முதல்வரை ஆ.ராசா தாழ்த்திப் பேசி இருப்பது கடும் விமர்சனத்தை எழுப்பி இருக்கிறது. இதனால் அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பலரும் எதிர்க்கட்சியினரை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியும் வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.