close
Choose your channels

'அவன் இவன்' படப்பிரச்சனை: ஆர்யாவுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்

Saturday, June 30, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கத்தில் ஆர்யா, விஷால், ஜனனி ஐயர் நடிப்பில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் 'அவன் இவன்'. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றாலும் இந்த படத்தில் சிங்கம்பட்டி ஜமீன் குறித்து தவறாக சித்தரித்ததாக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் ஆஜராகுமாறு நடிகர் ஆர்யா மற்றும் இயக்குநர் பாலா ஆகிய இருவருக்கும் பலமுறை நீதிமன்றம் உத்தரவிட்டும் இருவரும் ஆஜராகவில்லை.

இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோதும் பாலா, ஆர்யா ஆகியோர் ஆஜராகவில்லை. எனவே நடிகர் ஆர்யா மற்றும் இயக்குநர் பாலா ஆகியோருக்கு எதிராக அம்பாசமுத்திரம் நடுவர் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.