close
Choose your channels

தனுஷூடன் 4வது முறையாக இணையும் இயக்குனர்!

Thursday, January 2, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த மூன்று திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ஒருவர் மீண்டும் நான்காவது முறையாக அவரது படத்தை இயக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது

தனுஷ் நடித்த ‘பட்டாஸ்’ திரைப்படம் வரும் 16ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனையடுத்து அவர் ’பரியேறும்பெருமாள்’ மாரி செல்வராஜ் மாரி செல்வராஜ், ராட்சஸன் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளா

இந்த நிலையில் தனுஷின் 44வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என்றும், இந்தப் படத்தை தனுஷ் இயக்கி நடிப்பார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது இதில் ஒரு சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. தனுஷ் கதை திரைக்கதை வசனம் எழுதிய இந்த படத்தை மித்ரன் ஜவஹர் இயக்குவார் என்று கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே தனுஷ் நடித்த ’யாரடி நீ மோகினி’, ’உத்தமபுத்திரன்’ மற்றும் ’குட்டி’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் தனுஷ்-மித்ரன் ஜவஹர் ஆகியோர் நான்காவது முறையாக மீண்டும் இணைய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.