close
Choose your channels

கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான சம்பவம்: பூசாரி கைது!

Monday, April 22, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திருச்சி அருகே உள்ள துறையூர் முத்தையம்பாளையம் கிராமத்தில் உள்ள கருப்புசாமி கோவில் விழாவின் போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அந்த கோவிலின் பூசாரியான தனபால் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

துறையூர் கருப்புசாமி கோவிலின் பூசாரி தனபால் ஒவ்வொரு மாதம் அமாவாசை, பெளர்ணமி நாளில் சிறப்பு பூஜைகள் நடத்தி பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறுவது வழக்கமாக இருந்துள்ளது.

இந்த நிலையில் சித்ரா பவுர்ணமியில் நடந்த பிடிக்சுாசு வழங்கும் விழாவில் அதிக பக்தர்கள் குவிந்ததால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது இந்த நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உள்பட 7 பேர் பலியானார்கள். மரணம் அடைந்த 7 பேர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடியும் தமிழக அரசும் நிவாரண நிதி அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்த்து விசாரணை செய்த போலீசார் முதல்கட்டமாக பூசாரியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.