close
Choose your channels

தனுஷின் 'கேப்டன் மில்லர்': சூப்பர் அப்டேட்டால் ரசிகர்கள் உற்சாகம்!

Monday, November 14, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த ’திருச்சிற்றம்பலம்’ மற்றும் ’நானே வருவேன்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’கேப்டன் மில்லர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

‘கேப்டன் மில்லர்’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு டிசம்பர் 1ஆம் தேதி தொடங்க உள்ளதாகவும் இந்த படப்பிடிப்பில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் கலந்து கொள்ள இருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. மேலும் தனுஷ் மற்றும் சிவராஜ்குமார் மோதும் காட்சிகள் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் இந்த படத்தின் ஒட்டு மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக, அதன் பிறகு போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை தொடங்கி ஒருசில மாதங்களில் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இந்தப் படம் தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் உருவாகி வருகிறது. ஏற்கனவே இந்த படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகள் விற்பனை ஆகி விட்டதாக கூறப்படுகிறது என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.