close
Choose your channels

கிராமத்து தென்றலாகும் ப்ரியா பவானிசங்கர்: சன் பிக்சர்ஸ் அறிவிப்பு

Friday, June 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரியா பவானி சங்கர் கிராமத்து தென்றல் கேரக்டரில் நடித்து வருவதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

தனுஷ் நடிப்பில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ’திருச்சிற்றம்பலம்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும் இந்த படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் நடித்த நடிகை நடிகர்களின் கேரக்டர் குறித்து அறிவிப்பு வெளியாகி வருகிறது. முதல் கட்டமாக ராஷி கண்ணா, அனுஷா என்ற கேரக்டரில் நடித்து வருவதாகவும் அவர் தனுஷின் பள்ளிகால தோழி கேரக்டரில் நடித்து வருவதாக அறிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து பிரியா பவானி சங்கர் கிராமத்து தென்றலாக ’ரஞ்சனி’ என்ற கேரக்டரில் நடித்திருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

தனுஷ், ராஷிகண்ணா, ப்ரியா பவானிசங்கர், நித்யாமேனன், பிரகாஷ்ராஜ், பாரதிராஜா உள்பட பலர் நடித்த இந்தத் திரைப்படத்தை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தமிழகத்தில் ரிலீஸ் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.