close
Choose your channels

தனுஷ் படத்திற்காக தயாரான சென்னை டெல்லி எக்ஸ்பிரஸ் ரயில்

Sunday, July 5, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'கயல்' வெற்றி படத்தை தொடர்ந்து பிரபுசாலமன் இயக்கவுள்ள அடுத்த படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் முடிவடைந்து தற்போது படப்பிடிப்பிற்கு பிரபுசாலமன் குழுவினர் தயாராகவுள்ளனர். இம்மாதம் இரண்டாவது வாரம் படப்பிடிப்பு தொடங்குவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ள இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஓடும் ரயிலில் நடைபெறுவதாக உள்ளது. முழுக்க முழுக்க அனைத்து காட்சிகளையும் நிஜ ரயிலில் படமாக்கும் சாத்தியம் இல்லை என்பதால் ஒருசில காட்சிகளை படமாக்க சென்னை அருகேயுள்ள பின்னி மில்லில் பிரமாண்டமான ரயில் மற்றும் ரயில்வே ஸ்டேஷன் செட் போடப்பட்டுள்ளது. இந்த செட்டில் முக்கியமான சில காட்சிகளும், சண்டைக்காட்சிகளும் படமாக்கப்படவுள்ளது.

இந்த படத்தில் ஹாலிவுட் ஸ்டண்ட் பயிற்சியாளர் பணிபுரியவுள்ளார். ஸ்கைஃபால், ஷாங்காய் நூன், பேட்மேன் பிகின்ஸ் போன்ற சூப்பர்ஹிட் ஹாலிவுட் படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்த ரோகர் யுவான், இந்த படத்தில் பணிபுரியவுள்ளார். தனுஷ் ரெயில்வே ஃபாண்டரி ஊழியராகவும், அவரை காதலிக்கும் பெண்ணாக கீர்த்தி சுரேஷும் நடிக்கவுள்ளனர். முழுக்க முழுக்க த்ரில் மற்றும் சஸ்பென்ஸ் அடங்கிய இந்த பிரமாண்டமான படத்தை சத்யஜோதி தியாகராஜன் தயாரிக்கவுள்ளார். சென்னையில் இருந்து டெல்லி செல்லும் டுராண்டோ எக்ஸ்பிரஸ் ரயிலில் நடக்கும் ஒரு திடுக்கிடும் சம்பவத்தை தனுஷ் எப்படி சரி செய்கிறார் என்பதுதான் கதை என கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.