close
Choose your channels

வார்த்தைகள் அற்று திகைத்துப் போய் நிற்கிறேன்: தனுஷ் அறிக்கை

Friday, July 29, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வார்த்தைகள் அற்று திகைத்துப் போய் நிற்கிறேன் என தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் அறிக்கை விட்டுள்ளார். இந்த அறிக்கை தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவரான தனுஷ் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடியதை அடுத்து அவருக்கு திரையுலக பிரபலங்கள் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழ் திரையுலகினர் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் பாலிவுட் திரையுலகினர், ‘தி க்ரே மேன்’ இயக்குனர்கள் ரூசோ பிரதர்ஸ் உள்பட பல வெளிநாட்டு பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில் தனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து தன்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்து சற்று முன் தனுஷ் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

என்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த நல் உள்ளங்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவிக்க வார்த்தைகள் அற்று திகைத்து போய் நிற்கின்றேன். கடந்த 20 வருடங்களாக என்னுடைய சினிமா பயணத்தில் எனக்கு நம்பிக்கை அளித்த எனது ரசிகர்கள், நலம் விரும்பிகள் மற்றும் சினிமா துறையை சார்ந்த அனைவருக்கும் எனது நன்றி கலந்த வணக்கம்’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தனுஷ் பிறந்த நாளையொட்டி நேற்று வெளியான ’வாத்தி’ படத்தின் டீசர் மிகப்பெரிய அளவில் வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.