close
Choose your channels

இயக்குனரின் ரிலீஸ் தேதி அறிவிப்பால் அதிருப்தி அடைந்த நயன்தாரா ரசிகர்கள்!

Friday, September 2, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நயன்தாரா நடித்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை இயக்குனர் தெரிவித்த நிலையில் நயன்தாராவின் ரசிகர்கள் அதிருப்தி அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’கோல்ட்’. இந்த திரைப்படம் ஓணம் திருவிழாவின் போது அதாவது செப்டம்பர் 8 ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு அதற்கான புரமோஷன் பணிகளும் நடந்து வந்தது.

இந்த நிலையில் தற்போது திடீரென இந்த படம் ஒரு வாரம் ஒத்திவைக்கப்படுவதாக இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் அறிவித்துள்ளார். இந்த படத்தின் சில முக்கிய பணிகள் முடிவடையாததால் இந்த படம் செப்டம்பர் 15 அல்லது 16ஆம் தேதி ரிலீசாகும் என்றும் சரியான ரிலீஸ் தேதி விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

நயன்தாராவின் ‘கோல்ட்’ திரைப்படத்தை திரையரங்குகளில் ஓணம் திருவிழாவின்போது கண்டு ரசிக்கலாம் என்று காத்திருந்த அவருடைய ரசிகர்களுக்கு இயக்குனரின் இந்த அறிவிப்பு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.