close
Choose your channels

விஜய்யுடன் கார்த்திக் சுப்புராஜின் திடீர் சந்திப்பு ஏன்?

Monday, November 16, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'விஜய் 59' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு எந்த நேரத்திலும் வரலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் பீட்சா, ஜிகர்தண்டா என இரண்டே படங்களில் கோலிவுட்டின் முன்னணி இயக்குனர்கள் வரிசையில் இடம்பிடித்த கார்த்திக் சுப்புராஜ், சமீபத்தில் விஜய்யை நேரில் சந்தித்து பேசியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜை நேரில் அழைத்து 'ஜிகர்தண்டா' படத்தை விஜய் பாராட்டியதாக கூறப்பட்ட நிலையில், தற்போது இருவரின் சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவது யார்? என்பது இன்னும் முடிவாகாத நிலையில், கார்த்திக் சுப்புராஜுக்கு அந்த யோகம் கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.