close
Choose your channels

அடப்பாவிங்களா... ஊர்ப்பெயர் மாற்றத்தை கிண்டலடித்த தனுஷ் பட இயக்குனர்

Saturday, June 13, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் தமிழகத்தில் உள்ள பல ஊர்களின் பெயரை தமிழக அரசு மாற்றியது என்பது தெரிந்ததே. இந்த பெயர் மாற்றம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு மீம்ஸ்கள் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் தனுஷ் பட இயக்குனர் ஒருவர் தனது சமூக வலைப்பக்கத்தில் ’அடப்பாவிங்களா’ என்று ஊர்ப்பெயர் மாற்றம் குறித்து கமென்ட் அடித்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

‘துருவங்கள் பதினாறு’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி முதல் படத்திலேயே திரை உலகை திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் கார்த்திக் நரேன். இவரது இயக்கத்தில் சமீபத்தில் ’மாபியா’ திரைப்படம் வெளிவந்த போதிலும் இவரது இரண்டாவது படமான ’நரகாசுரன்’ இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் தமிழக அரசு ஊர் பெயரை மாற்றியது அடுத்து ’கோயம்புத்தூர்’ என்பதை ஆங்கிலத்தில் இதுவரை Coimbatore என்று அழைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ‘Koyampuththoor’ என்று மாற்றியது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள கார்த்திக் நரேன் 'அடப்பாவிங்களா' என்று கமெண்ட் அடித்துள்ளார்.

மேலும் தனது வெளிவராத 'நரகாசுரன்' படத்தின் டைட்டில் ஸ்பெல்லிங்கில் மாற்றம் செய்தால் ஒருவேளை அந்த படம் வெளிவருமோ? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கார்த்திக் நரேனின் இந்த இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனுஷ் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை கார்த்திக் நரேன் இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் கொரோனா வைரஸ் பரபரப்பு முடித்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.