close
Choose your channels

'கடைசி விவசாயி' படத்தில் விஜய்சேதுபதி நடிக்க வேண்டாம் என கூறினேன்: இயக்குனர் மணிகண்டன்

Friday, February 4, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் சேதுபதி நடிப்பில் மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கடைசி விவசாயி’ திரைப்படம் வரும் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் விஜய்சேதுபதி நடிக்க வேண்டாம் என்று கூறினேன் என்றும் ஆனால் விஜய் சேதுபதிதான் மிகவும் விருப்பப்பட்டு இந்த கேரக்டரில் நடித்தார் என்றும் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த இயக்குனர் மணிகண்டன் இந்த படத்தில் விஜய்சேதுபதி கேரக்டர் ஒரு சில காட்சிகளுக்காக காடு மலை ஏறி இறங்க வேண்டும் என்றும் அது மட்டுமின்றி வெயிட்டான காஸ்ட்யூம்கள் அணிந்துகொண்டு நடிக்க வேண்டும் என்பதால் விஜய்சேதுபதியை சிரமத்திற்கு உள்ளாக்க வேண்டாம் என்பதற்காக இந்த கேரக்டரில் நடிக்க வேண்டாம் என்று கூறினேன் என்றும் கூறினார்.

ஆனால் இந்த கேரக்டர் மீது மிகவும் விருப்பப்பட்டு விஜய் சேதுபதியே ஏற்று நடித்தார் என்றும் அவர் நடித்த உடன் தான் இந்த படம் ஒரு முழுமை பெற்றது என்று மணிகண்டன் கூறியுள்ளார்.

ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்த ’ஆண்டவன் கட்டளை’ என்ற திரைப்படத்தை மணிகண்டன் இயக்கி உள்ளார் என்பதும் அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தேசிய விருது பெற்ற ’காக்கா முட்டை’ திரைப்படத்தையும் மணிகண்டன் இயக்கியுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.