close
Choose your channels

இயக்குனர் ரஞ்சித்தின் அடுத்த படம் குறித்த தகவல்!

Sunday, August 30, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’அட்டக்கத்தி’ என்ற திரைப்படத்தின் மூலம் கோலிவுட் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் பா ரஞ்சித், அதன்பின் ’மெட்ராஸ்’ என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்தார். இந்த வெற்றியின் காரணமாக அவருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியின் ’கபாலி’ மற்றும் ’காலா’ ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த ’காலா’ திரைப்படத்திற்கு பின்னர் பா ரஞ்சித் இயக்கத்தில் அடுத்த படம் இன்னும் உருவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பா.ரஞ்சித், பாலிவுட்டில் ஒரு படத்தை இயக்கி வருவதாகவும், ஆர்யா நடிக்கும் ஒரு படத்தை இயக்கப் போவதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் ரஞ்சித்தின் தயாரிப்பு நிறுவனமான நீலம் புரடொக்‌ஷன்ஸ் என்ற நிறுவனம் ஏற்கனவே ’பரியேறும் பெருமாள்’ மற்றும் ’இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ ஆகிய இரண்டு திரைப்படங்களை தயாரித்து உள்ளது. மேலும் ரஞ்சித்தின் உதவி இயக்குனர் சுரேஷ் குமார் இயக்கும் ஒரு திரைப்படமும் தற்போது தயாராகி வருகிறது.

இந்த நிலையில் நீலம் புரடொக்‌ஷன்ஸ் தயாரிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை இரவு 7 மணிக்கு வெளியாக உள்ளதாக ரஞ்சித்தின் சமூக வலைப்பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. கலையரசன் மற்றும் அஞ்சலி பட்டீல் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப் படம் குறித்த மற்ற தகவல்கள் நாளைய பர்ஸ்ட் லுக் போஸ்டரில் தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.