close
Choose your channels

தொண்டர்கள் பிரார்த்தனை பலித்தது.. விஜயகாந்த் குறித்த மகிழ்ச்சியான செய்தி..!

Monday, December 11, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில நாட்களாக உடல் நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் விஜயகாந்த் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

கடந்த மாதம் உடல் நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும் சமீபத்தில் அவரது உடல்நிலை பின்னடைவில் இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டதால் தேமுதிக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனை அடுத்து தேமுதிக தொண்டர்கள் விஜயகாந்த் நலம் பெற கோவில்களில் பிரார்த்தனை செய்தனர். இந்த பிரார்த்தனையின் பலனாக தற்போது விஜயகாந்த் முழுமையாக குணமாகிய வீடு திரும்பி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது

சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் அவர்கள் பூரண குணமடைந்து இன்று வீடு திரும்பினார் என மருத்துவமனையின் சார்பில் அறிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தேமுதிக வெளியிட்டுள்ள அறிவிப்பில் ’தேசிய திராவிட முற்போக்கு கழக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் பூரண நலம் பெற்று மருத்துவமனையில் இருந்து இன்று காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பி விட்டார் என்பதை அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று அறிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos