close
Choose your channels

இதுக்கு மேல என்னால முடியாது, நான் வெளியே போறேன்.. திடீரென விஷ்ணு எடுத்த முடிவு..!

Monday, December 11, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான விஷ்ணு ’நான் சொல்லிவிட்டு கிளம்பலாம் என்று நினைக்கிறேன், இதுக்கு மேல என்னால முடியாது’ என்று மனவிரக்தியில் கூறும் காட்சி அடுத்த ப்ரோமோ வீடியோவில் உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர் விஷ்ணு ஆரம்பத்தில் இருந்தே கலகலப்பாகவும் அதே நேரத்தில் சக போட்டியாளர்களிடம் சண்டைக்கோழியாகவும் இருந்தார். தினேஷ், அர்ச்சனா, நிக்சன், விசித்ரா உள்ளிட்டவர்களுடன் அவர் காரசாரமாக சண்டை போட்டார். மேலும் தன்னை வில்லனாக நினைத்தாலும் பரவாயில்லை, ஒரு படத்தில் வலிமையான வில்லன் இருந்தால் தான் ஹீரோவுக்கு மதிப்பு என்றும் அவர் பூர்ணிமாவிடம் கூறியிருந்தார். இந்த நிலையில் நேற்று கமல்ஹாசன் அவருக்கு டோஸ் விட்டதை அடுத்து மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இந்த வாரத்திற்கான பொருட்களை எடுக்கும் பணி விஷ்ணு மற்றும் கூல் சுரேஷிடம் கொடுக்கப்பட்ட நிலையில் சர்க்கரை எடுக்க மறந்துவிட்டார்கள். பஸ்ஸர் அடித்த பிறகு விஷ்ணு இரண்டு பாக்கெட் சர்க்கரை எடுத்த போது ’என்ன விஷ்ணு யாருக்கும் தெரியாமல் எடுக்கிறீர்களா? என்று பிக் பாஸ் கேட்டார்.

இதனால் மீண்டும் மனவிரக்தி அடைந்த விஷ்ணு சர்க்கரை எடுக்காவிட்டால் நாம் தான் திட்டு வாங்கணும் என்று கூறியதோடு ’இதுக்கு மேல என்னால் முடியாது, நான் வெளியே போகலாம் என்று முடிவு செய்து விட்டேன்’ என்றும் கூறுகிறார். அந்த அளவுக்கு விஷ்ணு மனவிரக்தி அடைந்துள்ளது அவரது பேச்சிலிருந்து தெரிய வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.