close
Choose your channels

பாடகர் எஸ்பிபிக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை: தமிழக அரசு உதவுமா?

Tuesday, September 8, 2020 • தமிழ் Comments
SPB
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் தற்போது கொரோனாவில் இருந்து குணமாகிவிட்டாலும் நுரையீரல் பிரச்சனை காரணமாக எக்மோ மற்றும் வென்டிலேட்டர் கருவி மூலம் சிகிச்சை பெற்று வருகிறார்

இந்த நிலையில் எஸ்பிபி அவர்களுக்கு நுரையீரலில் பிரச்சினை இருப்பதாகவும் அதற்காக அவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. தமிழக அரசு சுகாதாரத் துறையில் எஸ்பிபியின் நுரையீரல் உறுப்பு மாற்றுக்காக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

ஏற்கனவே தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் எஸ்பிபியின் சிகிச்சைக்கு தமிழக அரசு எந்த வகையிலும் உதவி செய்ய தயார் என்று கூறியிருந்தார். எனவே எஸ்பிபியின் நுரையீரல் மாற்று சிகிச்சைக்கு தமிழக அரசு உதவி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.