close
Choose your channels

டெல்லியில் பயங்கர புழுதிப்புயல்: வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் என எச்சரிக்கை

Saturday, June 9, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

டெல்லியில் பயங்கர புழுதிப்புயல்: வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் என எச்சரிக்கை

வட இந்திய மாநிலங்களில் கடந்த சில மாதங்களாக அடிக்கடி புழுதிப்புயல் வீசி அந்த பகுதி மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில் இன்று டெல்லியில் இன்னும் சில நிமிடங்களில் பயங்கர புழுதிப்புயல் வீழும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதனையடுத்து டெல்லியில் உள்ள பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் பேருந்து போன்ற வாகனங்களில் பயணம் செய்து வருபவர்கள் இருக்கும் இடத்தில் அப்படியே இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் வீடுகளில் உள்ள மின்சார இணைப்பை அனைவரும் துண்டித்துவிட வேண்டும் என்றும் வீடுகளுக்கு வெளியே உள்ள மின்சார சாதனங்கள் எதையும் தொட வேண்டாம் என்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது.

மேலும் தகரத்தால் ஆன வீடுகளில் இருப்பவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த சில நிமிடங்களாக இருள் சூழ்ந்து வானிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.