close
Choose your channels

முடிவுக்கு வந்தது 'முரட்டு குத்து' புகழ் யாஷிகா ஆனந்தின் அடுத்த படம்

Saturday, June 9, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முடிவுக்கு வந்தது முரட்டு குத்து புகழ் யாஷிகா ஆனந்தின் அடுத்த படம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான வசனம் தான் 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' என்பது அனைவரும் அறிந்ததே. இந்த வசனத்தையே டைட்டிலாக வைத்து ஒரு திரைப்படத்தை யூடியூப் புகழ் 'எருமைச்சாணி' குழுவினர் தயாரித்து வந்தனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடந்து வந்த நிலையில் இன்றுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்தது.

விஜய்குமார், சத்யமூர்த்தி, ஹரிஜா, கோபி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ரமேஷ் வெங்கட் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' நடிகை யாஷிகா ஆனந்த் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மே 1ஆம் தேதி அஜித் பிறந்த நாளில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் விரைவில் இந்த படத்தின் டீசரை ரிலீஸ் செய்யவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கிளாப் போர்டு புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கெளசிக் க்ரிஷ் இசையில் ஜோஸ்வா ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படம் ஹாரர் காமெடி படமாக உருவாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.