close
Choose your channels

அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவு: இயக்குனர் தங்கர்பச்சான் வீட்டிற்கு சென்ற அதிகாரிகள்!

Sunday, August 8, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களின் உத்தரவின் பேரில் மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக தங்கர் பச்சானின் வீட்டிற்கு சென்றதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பிரபல இயக்குனர் தங்கர்பச்சான் தனது சமூக வலைத்தளத்தில் திமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி மாதந்தோறும் மின் பயன்பாட்டை அளவெடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்

இந்த கோரிக்கையை பார்த்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் உடனடியாக அதிகாரிகளிடம் தங்கர்பச்சான் அவர்களை நேரில் சென்று சந்திக்குமாறு அறிவுறுத்தியிருந்தார். இந்த அறிவுறுத்தலின் அடிப்படையில் மின்வாரிய அதிகாரிகள் தங்கர்பச்சான் வீட்டுக்குச் சென்று நேரில் சந்தித்தனர்.

அப்போது அவர் திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியவாறு மாதந்தோறும் மின் பயன்பாட்டினை அளவை அளவெடுக்க வேண்டும் என்றும் மாதந்தோறும் மின்சார கட்டணம் செலுத்தும் திட்டம் வந்தால் மின் கட்டணம் அனைவருக்கும் பாதியாக குறையும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். இதனையடுத்து அதிகாரிகள் விரைவில் அந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதாக விளக்கமளித்தனர்

இதுகுறித்து தங்கர்பச்சான் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ‘மின்துறை அமைச்சருக்கு எட்டிய செய்தி முதலமைச்சரின் பார்வைக்கும் சென்று சேர்ந்திருக்கும் என நம்புகின்றேன். மின் கட்டண சுமையால் இன்னல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டு மக்கள் அனைவருமே என்னைப் போன்றே முதலமைச்சரின் அறிவிப்புக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்' என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.