close
Choose your channels

அஜித் பட வசனம் இன்னும் ரசிகர்களுக்கு புரியவில்லை: நடிகை டாப்சி

Monday, September 16, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக இந்த படத்தில் அஜித் பேசும் வசனங்களில் ஒன்றான 'நோ மீன்ஸ் நோ' என்ற வசனம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் 'நேர் கொண்ட பார்வை' படத்தின் ஒரிஜினல் படமான 'பிங்க்' படத்தில் நடித்த நடிகை டாப்சி, 'நோ மீன்ஸ் நோ' என்ற வசனம் இன்னும் ரசிகர்களுக்கு புரியவில்லை என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

சினிமா நடிகை ஆவதற்கு முன் நான் தோழிகளுடன் டெல்லி சாலைகளில் நடந்து செல்வேன், மால்களுக்கு செல்வோம். நல்ல ரெஸ்டாரன்ட்களை தேடி உணவு உண்போம். ஆனால், இப்போது அது எதுவுமே முடியவில்லை. ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பை நான் ஏற்றுக்கொண்டாலும் அந்த அன்பு சில சமயம் எல்லை மீறிவிடுகிறது. குறிப்பாக வெளியிடங்களில் அவர்கள் காட்டும் அன்பு எனக்கு மட்டுமின்றி எனது குடும்பத்தார்களுக்கும் சிக்கலாகி விடுகிறது.

சினிமா நடிகர், நடிகைகளுக்கும் தனிப்பட்ட வாழ்க்கை என்ற ஒன்று இருக்கிறது. 'நோ மீன்ஸ் நோ என்பது ரசிகர்களுக்கு இன்னும் புரியவில்லை. இதனால், நான் உடைகளை கூட, வெளிநாட்டு மால்களில்தான் வாங்குகிறேன். நான் சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து வந்தவள். எனது குடும்பத்தில் முதன்முறையாக, நான் தான் பிரபலமாகி இருக்கிறேன். அதனால் நட்சத்திர அந்தஸ்து பற்றி என் குடும்பத்தினருக்கு புரியவில்லை. அதை புரிய முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்' என்று டாப்சி கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.