முதல்ல கவுன்சிலர் தேர்தல்ல நின்னு பழகுங்க விஷால்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் விஷால் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்ட நிலையில் இதுகுறித்து தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். தேர்தல் என்பது விளையாட்டு அல்ல என்றும் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்தில் போட்டியிடுவது போன்று பேப்பர் கொடுக்கும் விஷயம் அல்ல அரசியல் தேர்தல் என்றும் கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், 'முதலில் விஷால் கவுன்சிலர் தேர்தலில் நின்று தேர்தலில் போட்டியிடுவது எப்படி என்று பழக வேண்டும் பின்னர் சட்டமன்ற தேர்தலில் நிற்க வேண்டும். தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யும்போது உள்ளூரில் உள்ள பத்து பேர் கையெழுத்து போட வேண்டும். கையெழுத்து போட்டவர்கள், நாங்கள் தான் கையெழுத்து போட்டோம் என்று நேரில் கூற வேண்டும். திடீரென கையெழுத்து போட்டவர் ஆளை காணோம் என்று கூறுவதற்கு தேர்தல் என்ன விளையாட்டா? என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
மேலும் நிருபர் ஒருவர், 'விஷாலை பார்த்து அதிமுக பயப்படுகிறதா? என்று கேட்ட கேள்விக்கு 'அதிமுகவினர் பயப்படுவதற்கு விஷால் என்ன சூரப்புலியா? அதிமுகவினர்களுக்கு பாம்புகளையே கையில் பிடிக்கும் தைரியம் உண்டு' என்று பதிலளித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.