close
Choose your channels

விஷாலுக்கு ஆதரவாக சென்னை ஐகோர்ட் பிறப்பித்த புதிய உத்தரவு

Thursday, December 7, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆர்.கே.நகரின் வேட்பாளர் இறுதி பட்டியல் சற்றுமுன் வெளியாகிவிட்டதால் நடிகர் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை ஐகோர்ட் விஷாலுக்கு ஆதரவாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருக்கும் விஷால் வரும் ஞாயிறு அன்று சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த கூட்டத்தில் வாக்குரிமை தொடர்பாக சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக செய்திகள் வெளிவந்தன.

இந்த நிலையில் வரும் ஞாயிறு அன்று நடைபெற உள்ள, தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தயாரிப்பாளர்கள் கிஷோர், வடிவேல் உள்ளிட்ட மூன்று பேர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் வாக்குரிமை தொடர்பாக திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டால் பல தயாரிப்பாளர்களின் வாக்குரிமை கேள்விக்குறியாகும் நிலை இருப்பதாக குறிப்பிட்டு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் இந்த வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க மறுத்த நீதிபதி அதே நேரத்தில் பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவுகள் அனைத்தும், வழக்கின் இறுதி தீர்ப்புக்குக் கட்டுப்பட்டது என்று கூறி இந்த வழக்கை வரும் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.