close
Choose your channels

இன்று முதல் 50 பேருக்கு மதிய உணவு வழங்க போகிறேன்.. விஜயகாந்த் நினைவிடத்தில் விஜய் டிவி பிரபலம் பேட்டி..!

Friday, January 5, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்த விஜய் டிவி பிரபலம் இன்று முதல் எனது கேகே நகர் அலுவலகத்தில் 50 பேருக்கு மதிய உணவு வழங்கப் போகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

விஜய் டிவி பிரபலமான புகழ் தற்போது விஜய் டிவியில் உள்ள நிகழ்ச்சிகளில் மட்டுமின்றி திரையுலகிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் காலமான கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் இன்று அவர் அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது ’கேப்டன் ஐயா அவர்களின் மறைவுக்கு ஏற்கனவே நான் அஞ்சலி செலுத்தினேன். இன்று நான் மீண்டும் அஞ்சலி செலுத்த வந்ததற்கு என்ன காரணம் என்றால் பசி என்று வருபவர்களுக்கு சோறு போட்டு விஜயகாந்த் வழி அனுப்பி வைப்பார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

நான் கூட சென்னைக்கு வந்த புதிதில் பக்கோடா, வாட்டர் பாட்டில் மட்டும் தான் மதிய உணவாக சாப்பிட்டு இருந்தேன். இந்த நிலையில் விஜயகாந்த் அவர்கள் ஆசியோடு இன்று முதல் என்னுடைய கேகே நகர் அலுவலகத்தில் தினமும் 50 பேருக்கு மதிய உணவு வழங்க போகிறேன். 50 பேரில் இருந்து ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க போகிறேன். பசி என்று யார் வந்தாலும் அவர்களுடைய பசியை போக்க முடிவு செய்துள்ளேன். இது குறித்து இன்னும் விரிவாக ஒரு வீடியோவை வெளியிடுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.